மை



மை போட்டுவிட்டாள்
அவள் கண்ணுக்கு மட்டும் அல்ல
என் மனதிற்கும்
அவளை மட்டுமே பார்க்கும்படி ..

#யாஷிகா

ஆயிரம் கவிதைகள்




உண்மையை சொன்னால்
உன்னை பற்றிய கவிதைதான் ..
உன் அசைவுகளை
வரிகளாக்குகிறேன்..
உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி
உரைக்கபோகிறேன்..
உன் உதடுகள்
பேசத்தேவையில்லை .
அசைந்தாலே போதும் .
நான் ஆயிரம் கவிதைகள்
எழுதுவேன் ...!!

தேவதை



பறவைகளுக்கு மட்டும் அல்ல
கவிதைக்கும் சிறகுகள் முளைக்கும்
என்று உணர்ந்தேன்...
உனக்காக கவிதை எழுதும் போது...

நாம் காதல்



மறக்க முடியாத இடத்தில் நீயும்,
வெறுக்க முடியாத இடத்தில் நானும்
இருக்கும் வரை ..
எதோ ஒரு ஓரத்தில் வாழ்த்துக்கொண்டே இருக்கும் ..
நாம் காதல் ....😘😘😘

கடவுச்சொல்



பிடித்தவர்களின்
புகைப்படத்தை
புத்தகத்திற்குள்
ஒளித்து வைத்த காலத்தில்
கடவுச்சொல் தேவைப்படவில்லை ...

கஞ்ச தானம்





அடுத்த வரி கவி என்னென்று தெரியவில்லை
அவள் விழிக் கவிதையால்
மொத்தம் தொலைந்து போனேன்
பஞ்சம் இல்லாமல் எழுத்துக்கள் இருந்தும்
அவள் கருவிழி பார்த்ததும்
நான் கஞ்சம் பார்க்கிறேன்.....

தனிமை


நம்மை விட சில
முக்கியமான உறவுகள்
கிடைக்கும் போது...காரணங்கள்
தேடி நிராகரிக்கின்றன
சில உறவுகள்...!

சொல்லாத காதல்


சொல்லாமல் புரிந்து
கொள்வாய் என நினைத்தேன்
என் காதலை..
சொல்லாமல் போனதால் என்னமோ இன்று
இல்லாமல் போனது
என் காதல்....

கவிதை


எழுதி அழிப்பதற்கு
மணல் கவிதை அல்ல - நீ
என் மனக் கவிதை..!!


மௌனம்



பேசும் வார்த்தைகளை விட,
பேச முடியா மௌனத்திற்கே
வலிமை அதிகம்.. வலிகளும் அதிகம்...!!

நீயே கவிதையாய்



கவிதைகளை வாசிப்பது மட்டும் அல்ல .....
நேசிப்பதும் சுகம் தான்....
ஆம் நான் நேசிக்கும்
அழகான கவிதை
#நீ

தூறல்



காற்றில் ஈரப்பதம்
உணர்கிறேன்---
தூரத்தில் தூறலாய்
நீ...

ஏணி படி



என்
கவிதைகளெல்லாம்
எட்டா
உயரத்தில் உள்ள
உன் அழகை
எட்டி தொட நினைக்கும்
ஏணி படிகள் மட்டும் தான்..!!

காதலும் கண்ணீரும்




காதலை எல்லாருக்கும் பிடிக்கும்
ஆனால் காதலுக்கு தான்
எல்லோரையும் பிடிக்கவில்லை.
உன்னை இழந்த பிறகு
வரும் கண்ணீர் எவ்வளவு உண்மையே
அதே அளவு உன்னை நேசித்தேன்
என்பதும் உண்மை பெண்ணே...

பேரழகு



அவள்
புன்னகை
ஓர் அழகு ...
அதை
மறைக்கும்
அவள் செய்கை
பேரழகு ...!

வலி



வலி கூட எளிதில் கிடைத்துவிடாது
அதற்கு உண்மையாக
நேசிக்க வேண்டும்.....

அவள் பார்வை


அவள்
இயல்பாய் பார்க்கும்
பார்வை கூட...
என்
இயல்பு"நிலை"யை
பாதிக்கிறது...
அவளை
கடந்து செல்கையில்..!

உன் நினைவு



எப்போதும் ஓன்று சேரமாட்டோம் என்று தெரிந்தும்
தெடர்ந்து கூடவே வரும் தொடர்வண்டி பாதை போல
என் கவிதையும் தொடர்ந்து கொண்டே போகிறது
உன்னை நினைத்து...

வாழ்க்கை


வாழ்க்கை ரொம்ப விசித்தரமானது ..
இங்கு சிரிப்பவர்களை விட
சிரிப்பதை போல் நடிப்பவர்கள் அதிகம் ...
வாழ்க்கை வாழ கற்று தருகிறதே இல்லையே
நடிக்க நல்ல கற்று தருகிறது ...

காதல்


காதல் ஒன்றுதான்
புரிந்து கொண்டாலும் அழகு
பிரிந்து சென்றாலும் அழகு
வலிகள் தான் வேறுபடும்
காதல் வேறுபடாது..!!

அழகு..



அழகு..
முகத்தில் மட்டும் இல்லை
பல நேரங்களில் மனதில்
சில நேரங்களில் வார்த்தைகளில் .....

பொய்




இப்ப எல்லாம் உன் இதழ்கள்
பொய் சொல்லுவதை விட
உன் கண்கள் தான் அதிகமாக
பொய் சொல்லுகிறது
என்னை பார்த்தும் பார்க்கவில்லை என்று...

அதிசயம்




உலகில் எவ்வளவோ
அதிசயங்கள் இருந்தும்
என்னுலகின் அதிசயம்
என்னவளின் புன்னகை மட்டுமே ..

காத்திருக்கிறேன்




காத்திருந்தேன்
அன்று கண்களில் கனவோடு ..
இன்று கண்களில் கண்ணீரோடு ...
உனக்காக ..

அழகு



அழகுக்கு ஆயிரம் அர்த்தம்
தமிழில் இருக்கலாம்
பெண்ணே !!
ஆனால்
நான் உன்னை பார்த்து தான்
தெரிந்துக்கொண்டோன்..!!

காயம்



கொஞ்சம்
தள்ளி வைத்தால் கூட
நிறைய நெருங்கி வருகிறது
உன் மீதான காதல்
நீ என்னை காதலித்தை விட
நீ என்னை காயப்படுத்தியது தான் அதிகம்
என்று தெரிந்தும்...

இதய திருடி


திருடுவதற்கு எவ்வளோ இருந்தும்,
என் இதயத்தை மட்டும்
ஏன் திருடினாய் பெண்ணே....

புது காலை



புன்னகையோடு
பூக்கட்டுமே
புது நாள் ...

மௌனம்




சொல்ல முடியாத வலிகளுக்கு,
மௌனம் மட்டுமே மருந்து ...

கிறுக்கன்



பெண்ணே,
உன்னை போல ஒரு
பெண் குழந்தையைப் பெற்று விடாதே !
என்னை போல பல
கிறுக்கன்கள் கவிதைகளை கிறுக்கக்கூடும் ..

பெண்ணின் ஆசை



கனவுகளைப் போலவே
யாருக்கும் தெரியாமலே
கலைந்து போகின்றது
ஒரு சில பெண்களின்
ஆசைகளும்....!!!

தேவதை



 பெண்கள் தேவதைகளாக
பிறப்பதில்லை...
ஆண்களால் உருவாக்கப்படுகிறார்கள்..!

வாழ்க்கை




***போகும் போதே
ரசித்து விட்டு போ
திரும்பி வந்தால்
இருக்காது
"வாழ்க்கை"

தேவதை


இறைவனிடம் கேப்பது எல்லாம்
ஒவ்வொரு விடியலும்
உன் முகம் கண்டு எழும் வரம் வேண்டும்
என்பது மட்டும் தான் .

தருவாயா உன்னை





உனக்கு என்ன பிடிக்கும்
சொல் என்கிறாய்??
நீ என எப்படி சொல்லுவேன்
தரமாட்டாய் என் தெரிந்தும்..😊😊

காயம்




காயத்தின் வலி
காயப்படுத்துவர்களை பொறுத்து
அமைகிறது ..😔

கோபம்





கோபத்திற்கு
இருக்கும் மரியாதை
யாரும் புன்னகைக்கு
கொடுப்பதில்லை...

புன்னகை




உன் முகம் பார்த்தால்
இதழ்கள் சிரிக்கிறதோ
இல்லையோ
இதயம் நிச்சயமாய்
சிரிக்கிறது !

மீண்டும் வருவாயா ??



விட்டு செல்ல
எண்ணியதும் இல்லை.
விட்டுக் கொடுக்க
நினைத்ததும் இல்லை....
ஆனால்
உன் வார்த்தையால்
விலகியே நிற்கிறேன்
வலியுடன..
நீ மீண்டும் வருவாய் என்று..

தீர காதல்


கார்காலம் கதகதக்கும்
குளிர் வந்து உன்னை நனைக்கும்..
தீ மூட்ட தேவையேது
தீர காதலது இயற்கைக்கும்
உன் மீது ...😊😊

முத்தம்


உன்னிடம் அடிக்கடி
சண்டை போட ஆசை.
இப்படி சமாதானம் செய்வாய் என்றால்
#முத்தம்

சில சந்தோசம் சில சோகம்


உன்னை விட அழகான
ஆயிரம் பெண்களை பார்த்து விட்டோன்.
ஆனால்
உன்னை போல
யாரும் இல்லை.
சில நேரம் சந்தோஷத்தையும்
பல நேரம்
அழுகையையும் தருகிறாய்...

நிரந்தரம்



நானே நினைத்தாலும்
விடுவிக்க முடியாதுன்னை
வேண்டாமென உன்னை நினைத்தால்.
வெளியேறு அது உன் சுதந்திரம்
ஆயினும் வேண்டும் நீ,
இல்லையேல்
வாழும் உன் நினைவுகளில்
நிரந்திரமாய்...

அவள் நினைவு


முடிந்து விட்டது என்று
நினைத்த ஓன்று
முற்றுப்புள்ளி இல்லாமல்
தெடர்கிறது.
உன் நினைவு.. 

அவள் பார்வை


இதுவும் கடந்து போகும்
என்பதை ஏற்க மறுக்கிறேன்...
உன் கரு விழிக்குள் நான்
கடந்து போகையில்...

ஆறுதல் தேடி



நீ என்னை எவ்வளவு காயப்படுத்தினாலும்
உன்னை தேடிவருவேன்...!
உன்னுடைய தோளில் சாய்ந்து
ஆறுதல் தேடுவதற்க்காக...!

எதோ ஓன்று


நீ தந்த காதலை எல்லாம்
கவிதையாய் எழுதிவிட்டேன்.
நீ தந்த சோகங்களை எல்லாம்
சேர்த்து வைத்து இருக்கிறேன்
சொந்தமாக ஒரு பாடல் எழுத..
சாத்தியமா உன் மேல் கோபம் கிடையாது
சாதி,மதம்,ஏழை,பணக்காரன் என்று பல
இடையூறுகளை ஏற்படுத்தி வைத்துள்ள
சமூகத்தின் மேல் தான் என் கோபம் எல்லாம்.
எப்படியும் சொல்லுவேன் என் எழுத்துக்கள் வழியாய்..

திருட்டு


தப்பு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியவில்லை ?
அவள் இதயம் திருடுவதை.

காயம்


காதலின் அர்த்தம் உணர்ந்தேன்.
நீ தந்த காயத்தோடு ..
பிரிவின் அர்த்தம் உணர்கிறேன்.
நீ தந்த தனிமையோடு ...
இத்தனை வலிகளின் மத்தியிலும் புன்னகைக்கிறேன்
நீ என் கவிதைகளை கவனித்துக்கொண்டிருக்கிறாய்
என்ற நம்பிக்கையினால்.

தோல்வி


உன் மனதை முழுவதுமாக
கொள்ளையடித்த நான்.
ஏனோ, உன் நினைவுகளில்
நிலைத்திருக்க முடியாமல்
சற்றே தோற்றுத் தான் போனேன்..