தீர காதல்


கார்காலம் கதகதக்கும்
குளிர் வந்து உன்னை நனைக்கும்..
தீ மூட்ட தேவையேது
தீர காதலது இயற்கைக்கும்
உன் மீது ...😊😊

முத்தம்


உன்னிடம் அடிக்கடி
சண்டை போட ஆசை.
இப்படி சமாதானம் செய்வாய் என்றால்
#முத்தம்

சில சந்தோசம் சில சோகம்


உன்னை விட அழகான
ஆயிரம் பெண்களை பார்த்து விட்டோன்.
ஆனால்
உன்னை போல
யாரும் இல்லை.
சில நேரம் சந்தோஷத்தையும்
பல நேரம்
அழுகையையும் தருகிறாய்...

நிரந்தரம்



நானே நினைத்தாலும்
விடுவிக்க முடியாதுன்னை
வேண்டாமென உன்னை நினைத்தால்.
வெளியேறு அது உன் சுதந்திரம்
ஆயினும் வேண்டும் நீ,
இல்லையேல்
வாழும் உன் நினைவுகளில்
நிரந்திரமாய்...

அவள் நினைவு


முடிந்து விட்டது என்று
நினைத்த ஓன்று
முற்றுப்புள்ளி இல்லாமல்
தெடர்கிறது.
உன் நினைவு.. 

அவள் பார்வை


இதுவும் கடந்து போகும்
என்பதை ஏற்க மறுக்கிறேன்...
உன் கரு விழிக்குள் நான்
கடந்து போகையில்...

ஆறுதல் தேடி



நீ என்னை எவ்வளவு காயப்படுத்தினாலும்
உன்னை தேடிவருவேன்...!
உன்னுடைய தோளில் சாய்ந்து
ஆறுதல் தேடுவதற்க்காக...!

எதோ ஓன்று


நீ தந்த காதலை எல்லாம்
கவிதையாய் எழுதிவிட்டேன்.
நீ தந்த சோகங்களை எல்லாம்
சேர்த்து வைத்து இருக்கிறேன்
சொந்தமாக ஒரு பாடல் எழுத..
சாத்தியமா உன் மேல் கோபம் கிடையாது
சாதி,மதம்,ஏழை,பணக்காரன் என்று பல
இடையூறுகளை ஏற்படுத்தி வைத்துள்ள
சமூகத்தின் மேல் தான் என் கோபம் எல்லாம்.
எப்படியும் சொல்லுவேன் என் எழுத்துக்கள் வழியாய்..

திருட்டு


தப்பு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியவில்லை ?
அவள் இதயம் திருடுவதை.

காயம்


காதலின் அர்த்தம் உணர்ந்தேன்.
நீ தந்த காயத்தோடு ..
பிரிவின் அர்த்தம் உணர்கிறேன்.
நீ தந்த தனிமையோடு ...
இத்தனை வலிகளின் மத்தியிலும் புன்னகைக்கிறேன்
நீ என் கவிதைகளை கவனித்துக்கொண்டிருக்கிறாய்
என்ற நம்பிக்கையினால்.

தோல்வி


உன் மனதை முழுவதுமாக
கொள்ளையடித்த நான்.
ஏனோ, உன் நினைவுகளில்
நிலைத்திருக்க முடியாமல்
சற்றே தோற்றுத் தான் போனேன்..

விடை தெரியா கேள்வி


உன்னை ஏன்
பிடித்திருக்கு என்பது மட்டும்
இன்று வரை விடை தெரியாத
கேள்வியாக இருக்கிறது.

தேடுகிறேன்


உன்னை
தொலைக்கவே இல்லை
பிறகு ஏன் தேடுகிறேன்
என்று தான் தெரியவில்லை 

எது காதல் ?


நேசிப்பதெல்லாம்
காதல் இல்லையென்றாலும்....
காதல் மட்டுமே
நேசிக்கப்படுகிறது....
ஏனென்றால்
நம் காதல் உண்மையென்பதால்.

உண்மை காதல்


கல் நெஞ்சம் படைத்தவரை
காதல் விடுவதில்லை !!
காமம் என்கிற போர்வையில்
மெய் காதல் வருவதில்லை !!
தேடி வரும் காதல் கசப்பதில்லை !!
தேடி அலையும்
காதல் அமைவதில்லை !!
சாதியை காதல் மதிப்பதில்லை !!
நன்றியை காதல் மறப்பதில்லை !!
மறைந்த காதல் இறப்பதில்லை !!
பிரிந்த காதல் மறப்பதில்லை !!
#படித்ததில்_பிடித்தது

கற்பனைக்காதல்..


நிஜத்தில் தத்தளித்து!
கனவுகளில்
கரையொதுங்குகின்றன!
என் கற்பனைக்காதல்..
உன்னை பார்த்ததும்
பூத்தது எனக்குள்
பூக்கள் அல்ல -
உன் புன்னகையின் பிம்பங்கள்,
வேண்டும் நீ
இல்லையேல் வாழும்
உன் நினைவுகளுடன்
என் உயிர்...

நீயில வாழ்க்கை


என்னதான் நான் மகிழ்ச்சியாக
இருப்பதாக காட்டிகொண்டாலும்,
நீ இல்லாது இருப்பது நெருடலாக
என் விழிகள் உன்னை தேடும் திசை.
அறியாது குருடாகி போனதே,!!

அதிசயம்


உலக
அதிசயங்கள் எல்லாம்
கல்லால் ஆனவையடி
இல்லையேல்
உன்னையும் சேர்த்திருப்பார்கள்..!!

அவள் போல் யாருமில்லை


அழகான பெண்கள் ஆயிரம்
பேர் பிறக்கலாம் ..
ஆனால் அவை அனைத்தும்
அவளாக முடியாது ..
அழகு என்பது உடம்பில் உள்ள
தோளில் இல்லை
அடுத்தவர்கள் உணர்வுகள்
மதிப்பதில் இருக்கிறது

நிலா


இரவில் மின்சாரம் நின்று விட்டது
என்று மெழுகுவர்த்தியை தேடுகிறது.
ஒரு நிலா

காதல் கசப்பதில்லை


மொத்த காதலும்
உன்னிலே முடிவதால்....
காதல் என்றும்
கசப்பதில்லை எனக்குள்.....
தொலைந்து போனாலும்
தேடுவதே காதலடி......

உன் பிரிவு


தொடரவும் முடியாமல்,
தொலைக்காவும் முடியாமல் தவிக்கிறேன்..
உன் பிரிவால் ☺️☺️

அழகான பெண்


உன்னை படைத்த
அந்த பிரம்மனே
உன்னை கண்டு பெருமூச்சி
விட்டானோ!
ஐயோ !
இவ்வளவு அழகான
பெண்ணை பூமிக்கு
அனுப்பி விட்டோமே என்று...

கோபம்


உன் கோபத்தை கூட நேசிக்கிறேன்
அதிலும் உன் காதல் கலந்திருப்பதால்..

வார்த்தை


சொன்ன சொல்,
சொந்தமென்றால்,
சொன்னவள்,
சொந்தமானது,
சொல்லாமலோ!😍😍😍

வலி


தொலைக்கப்பட்டத்தை விட
அதிக வலி தருவது,
தேடப்படாமல் இருப்பது!!!

இமைகளே வேண்டாம்


ஒரு நிமிடம்
நீ என்னை கடந்து
செல்லும் போது
எனக்கு இமைகள் இருப்பதை
மறந்து விடுகிறது...

கவிதை


கவிதை போட்டிக்காக
யாரோ ஒருவரிடம் கெஞ்சி நிற்கிறாய்
ஒரு கவிதைக்காக...
உன்னையே ஒரு கவிதையாக்கி
உனக்கென இத்தனை கவிதைகள்
நான் எழுத.!!

அழகியே



அழகை பதுக்கி வைத்தல்
குற்றம் என !
சட்டம் இயற்றினால் என்ன
செய்வது !
ஐயையோ !
நீதானே சட்டத்தின் முதல்
குற்றவாளி !

காதல் தோல்வி


ஒவ்வொரு காதலும் தோல்வி அடையும்
போது தான் தெரிகிறது இன்னும்
காதலிக்க தெரியவில்லை என்று..

காதலே காதல் கொண்டது



பெருமை பேசாதவள்...
குணத்தால் பேர் பெற்றவள்...
கனிவால் கவனம் பெற்றவள்...
நம்பிக்கையால் நாளும் வாழ்பவள்...
தைரியத்தின் மகளாய் இருப்பவள்...
தப்பித்தங்களை சுட்டெரிப்பவள்...
நட்பினை ஏமாற்ற தெரியாதவள்...
துரோகச் செயல்களை அறவே வெறுப்பவள்...
தன்மானம் தவறா உறுதி கொண்டவள்...
உள்ளும் புறம்பும் அழகைக் கொண்டவள்...
வீண் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதவள்...
அன்பின் இலக்கணம் முழுமையாகக் கற்றவள்...
மரியாதை தரும் மாண்பை கொண்டவள்...
காதல் இவளிடம் காதல் கொண்டது...

அத்தியாம்


உனக்காக அழுத நாள்கள் கடந்து
இப்போது
உன்னால் அழுகிறேன்...
ஆசைப்பட்டதற்காக அன்றும்,
அதிகமாக
அன்பு வைத்ததற்காக இன்றும் அழுகிறேன்..
என் வாழ்க்கையின் அத்தியாமே அழுகை தான் போல..

காதலின் வேலை


பிடிக்காததை பிடிக்க செய்வதும்
பிடித்ததை பிடிக்காமல் செய்வதும் தான்
இந்த பித்துபிடித்த காதலின் வேலை...

ராட்சசி


அழகிய ராட்சசி அவள்
அவளை மிஞ்ச
இன்னொரு ராட்சசி இல்லை
இந்த உலகத்தில்..

நேசி


கவிதையாக நீ மாறினாய்
கவிஞனாக என்னை மாற்றினாய்
கவிதையை நேசித்த கவிதையே
இந்த கவிஞனையும் ஒருநாள்
நேசிப்பாய் என்று
காத்திருந்தேன்...!
காத்திருக்கிறேன்...!!
காத்திருப்பேன்...!!!

எந்த நாட்டு இளவரசி?


பூக்களே ஆடைகளாய்
புன்னகையே அணிகலனாய்
கூந்தல் அருவியை நீந்தவிட்டு
குதிக்கும் மீன்களை கண்களாக்கி
புருவம் இரண்டை வில்லாக்கி
என் இதயத்தை இரண்டாக்கி
என் கண்களோடு போர் செய்யும் இவள்
எந்த நாட்டு இளவரசி?

உன் புன்னகை


வழி தெரியாத
பயணத்தில்
வலி தெரியாமல்
செய்துவிட்டு போகிறது,
விழியில் ஆரம்பித்து
இதழில் முடிந்த
உன் புன்னகை..!!

பிரியம்


காரணமே இல்லாமல் 
காதல் கொண்டேன் உன்மேல்
உன்னை நேரில் கண்டது இல்லை
ஆனால் உன் புகைப்படத்தை பார்த்த உடனே
அனுமதி கேக்காமலே அழுத்திவிடுகிறது
லைக் பட்டனை...

பிரியத்தையே பெயராய் கொண்ட
ப்ரியாவின் ரசிகனா இருப்பது சந்தோசம் தான் 

தேவதை


தேவதை எல்லாம்
விண்ணுலகில் தானே இருக்கும்
நீ மட்டும் எப்படி பூமிக்கு வந்தாய்.

அழகு

இறைவன்
அவளை அவ்வளவு
அழகாய் படைக்கவில்லை.
ஆனால் அவளை மட்டுமே
ரசிக்கும்படியான கண்களை
எனக்கே படைத்துவிட்டான் போலும்...

துணை


தனியா நடக்க
பழக்கிய பிறகு தான்
துணையாக வருகிறேன் என்பார்கள்
கொஞ்சம் தொல்லை தான் 

கவிதை


நீ
என் கூட இருந்தாலும், இல்லையென்றாலும்
என்னால் ஆயிரம்
கவிதை எழுத முடியும்...
ஆனால் உன் நினைவு இல்லாமல்
ஒரு சொல் கூட. எழுத முடியாது.

அழகோ அழகு! அவள் பேரழகு


அழகின் மறுஉருவம்!
அன்பின் திருஉருவம்!

வானிலவும் ஏங்கி தவிக்குது!
வானவில்லும் வந்து வியக்குது!

உச்சி முதல் பாதம்வரை ஓரலகு!
உள்ளமோ பேரழகு!

மெச்சி அவள் நிழல் தொட்டே
மெய் சிலிர்த்து போனேன்

மயில் ஆடும் கண்கள்!
மனமோ மார்கழி திங்கள்!

குயிலிசை பேச்சு!
குணமோ உயிர் மூச்சு!

நெற்றி வகிடில் நேர்மையும்!
நெற்றி பொட்டில் பெண்மையும்!

காப்பிய கவிஞர்கள் காதலித்து
கவிதை படைத்த நாயகி!

கலைகளின் அரசி!
காவியத்தலைவி!

காத்திருப்பால் கனவோடு!
காதலன் என் ( ஜெர்ரி ) நினைவோடு!

புன்னகை மொழி பேசிடும்!
பூக்களின் மணம் வீசிடும்!

இயற்கை எழில் கொஞ்சிடும்!
இனியவள் என்னவள்!!!

அழகோ அழகு!!
அவளோ பேரழகு!!!

நாடகம்


அழகான நாடகமொன்று
அரங்கேற்றிச் சென்று விட்டாள்
என் இதயக் கூட்டில்
காதலென்றே ஒன்றை...

அனைத்தும் அவளே


காதல் சுகமானது மட்டும் இல்லை
வலிகளும் நிறைந்தது என்பதை
அவள் விட்டு சென்ற பிறகுதான் தெரிந்தது..
வாழ்க்கை ஏற்றத்தாழ்வை கொண்டது தான்
ஆனால் என் வாழ்க்கையில்
ஏற்றத்தை கொடுத்த அவளே
இறக்கத்தை கொடுப்பாள் என்று தான் எதிர்பார்க்கவில்லை...

உயிரற்று போகுமென்று


ரசிக்கப்படா ஓவியங்கள்...
வாசிக்கப்படா கவிதைகள்...
வர்ணிக்கப்படா பெண்ணழகு...
இப்படிதான்...
உனக்காக எழுதிய
கவிதைகளுக்கு தெரியாது....
நீ வாசிக்காமலே
உயிரற்று போகுமென்று.....

அகராதி


நூலகம் முழுவதும்
தேடி அலைந்துவிட்டேன்,
நீ பார்த்த பார்வையின்
அர்த்தம் தேடி...
அகராதி என்று
சொல்லிக் கொண்ட
நூல்களெல்லாம்
அவமானம் கொண்டது
அர்த்தம் தெரியாமல் ,,,

ரசித்துக் கொள்கிறேன்


நிலவாகவே நீ இரு
நெருங்க முடியா விட்டாலும்

ரசித்துக் கொள்கிறேன்
என் தேவதையே ...!

ஆழகு


நீ
எத்தனை அலங்காரம் செய்தாலும்
உன் வெட்கமே முதல் ஆழகு...

அவள் நினைவு


நீ பேசும் வார்த்தைகளை கண்டு
நான்
பிரம்மித்த நாட்களும் உண்டு.
நீ பேசும் வார்த்தைகளை கேட்டு
நான்
மரணித்த நாட்களும் உண்டு