
சேர்ந்திருப்பது
மட்டும் காதல் அல்ல!
உணர்வுகளோடு கலந்திருப்பது
தான் காதல்!
நீயும் நானும்
முகம் பாராமல் இருக்கலாம்,
ஆனால் என் வலி
என்ன என்று நீ அறிவாய்......
உன் வலி என்ன என்று
நான் அறிவேன்..............
நம் இருவரையும்
பிரித்துவிட்டேன்
என்று விதி சிரிக்கிறது!
ஆனால் அதற்கு தெரியாது
பிரிவது என்பது
உடல் அல்ல ஆத்மா
என்று ,
இன்று நாம் தள்ளி
நிற்கலாம்
ஆனால் நினைவுகள்
முன்பை விட
மிக அருகே நிற்கிறது
பின்பு
எப்படி அது பிரிவு
என்று சொல்ல முடியும்.....?
No comments:
Post a Comment