மனதின் காயங்கள்

பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்
உன்னை பிரியக்கூடாது என்று ...
பிரிந்த போது நினைக்கிறேன்
உன்னை ஏன் பார்த்தேன் என்று ...


வெட்ட வெட்ட
மீண்டும் வளரும் நாகமாய்.
சாகாவரம் பெற்று துரத்துகின்றன
உன் நினைவுகள் ...

என் நிழல்கள்
என் கால்களை 
கட்டிக்கொண்டு அழுகிறது ..
உன் நிழலை காணாமல்


உன் நினைவுகளை தூங்க
வைக்க முடியாமல்
நானும் விழித்திருக்கிறேன்
தினமும் கண்ணீரோடு ..

No comments:

Post a Comment