பூ



உன் முகத்தில் விழுந்து
காற்றில் அசைந்தாடும்
அந்த ஒற்றை முடியை
நீ எடுத்து எடுத்து
உன் காதோரம் விட்டாலும்
அது மீண்டும் விழுகிறதே
ஏன் தெரியுமா...?
உன் முகத்தை அது பூவென
நினைத்து விட்டது போலும்...!

No comments:

Post a Comment