
காலை பனியின்
இளங்குளிரில்
கவிதையாய்
நீ கோலம்
வரைய....
என் கால்களின்
தடங்கள்
குனிந்த
உன் தலையை
நிமிர்த்த....
கோடி மின்னல்கள்
எனைத்தாக்க
என் விழிகள்
திறந்திருக்கும்
போதே எப்படி??....
திருடினாய்!?...
என் இதயத்தை....
விழிகள் விரிய
உன் விழி
நிறைய
#நாணம்......
நேசத்தை
விழியில் ஏந்தி
வீழ்த்தியே விட்டாய்....
உன் விழிகளில்
#காதலை.
No comments:
Post a Comment