என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
புன்னகை
உன் புன்னகையை
சலவை செய்து
கவிதை எழுதுகிறேன்
உன் வியர்வையை
நுகர்ந்த காற்று
பூக்களின் ரகசியம்
உன் இமைகளோடு
பட்டாம் பூச்சிகள்
ஒப்பந்தம் செய்கிறது
உன் சலங்கையின்
சங்கீத ஓசையில்
மின்மினி பிறக்கிறது..
No comments:
Post a Comment